அமீரகம்: எச்சரிக்கை! COVID-19 விதிகளை மீறினால் அரசு ஊழியர்களின் மூன்று நாள் ஊதியம் குறைப்பு
அமீரகத்தில் சமீபமாக கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் அமீரக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் கோவிட் -19 விதிகளை மீறினால் மத்திய அரசு ஊழியர்கள் மூன்று நாள் சம்பளக் குறைப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் (FAHR) செவ்வாயன்று இந்த எச்சரிக்கையை வெளியிட்டது, அதில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வைரஸ் பரவாமல் தடுக்க வைக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
மேலும் “பணியிடத்தில் கோவிட் -19 விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்” என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் வழங்கப்பட்ட சுற்றறிக்கையில், FAHR அங்குள்ள அதிகாரிகளுக்கு தங்கள் ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு நினைவூட்டியது, எனவே கோவிட்-19 பரவுதலை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிறுவனங்களுக்கு முன்னர் வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகிறது.
கோவிட் -19 தொற்றுநோய்களின் போது பணிச்சூழலை பராமரித்தல் மற்றும் அலுவலகங்களில் இருந்து பணியாற்றுவது பற்றிய FAHR அறிவுறுத்தல் கையேட்டின் படி அனைத்து அரசு ஊழியர்களும் உடல் ரீதியான தூரத்தை பராமரிக்கவும், முகமூடிகளை அணியவும், மற்ற அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.
விதிகளை மீறும் ஊழியர்களுடன் கையாளும் போது கையேட்டின் வழிமுறைகளை செயல்படுத்த மத்திய அரசு நிறுவனங்களின் மனிதவளத் துறை எச்சரித்துள்ளது.

