ராஸ் அல் கைமா(RAK): வாகன ஓட்டுநர் உரிமத்தை விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்க ஆன்-லைன் (Online) வழியாக மட்டுமே அனுமதி !
ராஸ் அல் கைமாவில் (RAK) வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்க உள்துறை அமைச்சகத்தின் பயன்பாடு அல்லது வலைத்தளம் (Ministry of Interior’s App or Website) வழியாக மட்டுமே செயல்பட முடியும் என்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக எந்தவொரு RAK போலீஸ் கவுண்டர்களிலும் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
RAK காவல்துறையின் இயந்திர மற்றும் ஓட்டுநர் உரிமத்தின் செயல் இயக்குநர் கர்னல் சக்ர் பின் சுல்தான் அல் காசிமி கூறுகையில், இந்த நடவடிக்கை “உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படும் டிஜிட்டல் மாற்றத்திற்கு” ஏற்ப அமைந்துள்ளது என்றார்.
“ஸ்மார்ட் பயன்பாடுகள் (Smart Applications) மற்றும் வலைத்தளங்களை பயன்படுத்துவது ஒரு வெற்றியான திட்டமே என்றும், இது விண்ணப்பதாரர்கள் மற்றும் பணியாளர்களின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துகிறது” என்றும் கூறினார்.
“ஓட்டுநர் உரிமத்திற்கான அனைத்து விண்ணப்பதாரர்களும் சாலையில் தங்கள் உடற்தகுதியை உறுதிப்படுத்த RAK மருத்துவமனையில் பெறக்கூடிய ஒரு மருத்துவ பரிசோதனையை அமைச்சகம் இப்போது வழங்குகிறது” என்று மேலும் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு, போலீஸ் நிலையங்கள் அல்லது போலீஸ் சேவை மையங்களை பார்வையிட விரும்புவோர் நெகடிவ் PCR பரிசோதனை முடிவை காண்பிக்க வேண்டும் என்று RAK காவல்துறை அறிவித்திருந்தது. துபாயும் ஷார்ஜாவும் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

