Monday, March 2, 2026
HealthNational

ரமலான் நோன்பில் நீரிழிவு நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் என்ன? மருத்துவ ஆலோசகரின் விளக்கம்!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

நீரிழிவு நோயாளிகள் ரமலான் மாதத்தில் அவர்களின் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முபதாலா சுகாதார கூட்டாளரான இம்பீரியல் கல்லூரி லண்டன் நீரிழிவு மையத்தின் (ICLDC) உள் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஃபர்ஹானா பின் லூட்டா, நீரிழிவு நோயாளிகள் தங்களின் உடல்நல அபாயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நோன்பின் போது நீரிழிவு நோயாளிக்கு ஏற்படக்கூடிய ஹைப்போகிளைசீமியா (குறைந்த இரத்த சர்க்கரை), ஹைப்பர் கிளைசீமியா (உயர் இரத்த சர்க்கரை), டீஹைடிரேஷன் (நீரிழப்பு) மற்றும் டயாபெடிக் கீட்டோஅசிடோசிஸ் (DKA) போன்ற நான்கு முதன்மை ஆபத்துக்களை அவர் பட்டியலிட்டார்.

DKA என்பது இரத்தத்தில் அதிகப்படியான அமில நச்சுகளை உருவாக்குவதோடு அதிக சர்க்கரை அளவையும் உள்ளடக்கியதாகும்.

வழக்கமாக, டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது, மேலும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளும் விலகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நோயாளி நோன்பு நோற்க தகுதியுடையவர் எனக் கண்டறியப்பட்டால், அவர் ஒரு நாளில் இரத்த சர்க்கரை அளவை பல முறை சரிபார்க்க வேண்டும். மேலும், ஒரு நோயாளி பெரிய இப்தார் உணவை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

குளுக்கோஸ் அளவை சுய கண்காணிப்பு செய்வது அவசியமான ஒன்றாகும். இது மத மற்றும் மருத்துவ நடைமுறைகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

“பொருத்தமான திட்டமிடல் மற்றும் கண்காணிப்புடன், மற்றும் ஒரு மருத்துவ நிபுணரின் உதவியைப் பெறுவதன் மூலம், ஒரு நீரிழிவு நோயாளி ரமலான் மாதத்தில் நோயாளி எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களைக் கையாள மிகவும் சிறந்தவராக இருப்பார்,” என்று அவர் மேலும் கூறினார்.