Monday, March 2, 2026
BusinessNational

ஹவாலா சேவை வழங்குபவர்களுக்கு பதிவு (Registration) செய்தலை அமீரகம் கட்டாயமாக்குகிறது.

Hawala Service…

நாட்டிலுள்ள ஹவாலா சேவை வழங்குபவர்கள் பதிவு செய்வதை அமீரகம் கட்டாயமாக்கியுள்ளது, ஏனெனில் நாடு தனது பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி (AML/CFT) கட்டமைப்பை வலுப்படுத்துகிறது என்று மத்திய வங்கி திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திங்களன்று அபுதாபியில் பண மோசடி மற்றும் பயங்கரவாத மற்றும் சட்டவிரோத அமைப்புகளுக்கு நிதியளித்தல் (NAMLCFTC) ஆகியவற்றை எதிர்ப்பதற்கான தேசிய குழுவின் ஆறாவது கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹவாலா, அல்லது ஹுண்டி, ஒரு அதிகாரப்பூர்வமற்ற மற்றும் முறைசாரா வழியாகும். இது முக்கியமாக தெற்காசியர்களிடையே பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் அவர்கள் முகவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள், பின்னர் நாட்டில் உள்ள தங்கள் கூட்டாளிகளுக்கு அதை வாடிக்கையாளரின் வீட்டிற்கு வழங்குமாறு அறிவுறுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் இந்த முறைசாரா பரிமாற்ற முறை மூலம் 100 பில்லியன் முதல் 300 பில்லியன் டாலர் வரை பயன்படுத்தபடுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அமீரகம் பணம் அனுப்புவதற்கான முக்கிய சந்தைகளில் ஒன்றாக இருப்பதால், இந்த முறைசாரா தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவது பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை கண்காணிக்க உதவும். இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் தலைமையிலான அமீரகத்தில் இருந்து பணம் அனுப்புவது 2019 ஆம் ஆண்டில் சுமார் 165 பில்லியன் டாலராக இருந்தது.

அமீரகத்தின் மத்திய வங்கியின் ஆளுநரும் குழுவின் தலைவருமான அப்துல்ஹமீது எம். சயீத் அல் அஹ்மதி தலைமையில், கூட்டத்தில் மனித மற்றும் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.